Sunday, 28 October 2018
ஆந்தகுடி இளையராஜா மண்ணிசை இளவரசன் Dr.C.இளையராஜா ''மண்ணிசை இளவரசன் Dr.C.இளையராஜா'''' கிராமியப் பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர். ==அறிமுகம்== தெம்மாங்கு பாடல்கள் மூலம் பெயர் பெற்று இன்று திரைத்துறையிலும் முத்திரை பதித்து வரும் பாடகர் இளையராஜா அவர்கள் 1984ம் வருடம் பிப்ரவரி 07ம் நாள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள குக்கிராமமான ஆந்தக்குடியை சேர்ந்த சின்னத்தம்பி - வீரம்மாள் ஆகியோருக்கு மகனாய் பிறந்தார். இவர்கள் குடும்பம் நாடகக்கலையில் பெயர் பெற்று விளங்கியது. இளையராஜா அவர்களின் இரத்ததோடு கலந்திருந்த கிராமிய கலைகள் அவரை அந்த கலைக்குள்ளே தானாகவே வரவைத்தது எனலாம். ==கல்வி== இவர் சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூரில் பத்தாவது வரை படித்தார். பின்பு சி.கே.மங்களம் என்ற ஊரில் 11, 12ம்வகுப்புகளை படித்து முடித்தார். அதன் பின், வள்ளல் அழகப்பர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் முடியரசன் என பல கவிஞர்கள், அரசியல் தலைவர்களை உருவாக்கிய ஊரான செட்டிநாடு என புகழ்பெற்ற காரைக்குடியில் உள்ள அழகப்பா கலைக் கல்லூரியில் பி.பி.இ., என்ற படிப்பை ஆங்கிலத்தில் பயின்று முடித்தார். கிராமிய கலை== அழகப்பா கலைக் கல்லூரியின் நுண்கலை மன்றத்தின் வாயிலாக திருச்சி ராஜ் ரிச்சர்ட்ஸ் இவர்களின் இசைக் குழுவில் இடம் பிடித்தார். மேலும், நாட்டுப்புறப் பாடல்கள் மீது கொண்ட பற்றினால் பல கிராமிய நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்று தனக்கென தனி முத்திரை பதித்து விளங்கினார். குறுந்தகடு== இவர் 2010ல் - மானே மரதமே,2011ல் - உன் சிரிப்புலதான்,2014ல் - வாடி என் கருத்தப்புள்ள போன்ற இசைத் தொகுப்புகளை தயாரித்து, பாடி வெளியிட்டுள்ளார். Youtube== 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அத்த மக உன்ன நெனச்சு..... உன் சிரிப்புலதான்........ ஆகிய பாடல்களை தன் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களின் கண்களுக்கு இதம் தர, விழா படத்தின் இணை இயக்குநரும், கவிஞருமான திரு. இராஜாகுருசாமி அவர்களின் இயக்கத்தில், தானே நடித்து வீடியோ வடிவத்தில் 'யூடியூப்' -ல் வெளியிட்டார். அதன் மூலம் குரலால் மட்டுமே அனைவரின் உள்ளங்களையும் ஆக்ரமித்த இவர், அவர்களின் கண்களின் வழியாக உள்ளத்தை ஆக்ரமித்தார். இந்த இரு பாடல்களின் வரவேற்பை தொடர்ந்து.... 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் தனது 'வாடி என் கருத்தப்புள்ள' என்ற பாடலை விழா படத்தின் இயக்குநர் திரு. இராஜா குருசாமி அவர்களின் இயக்கத்தில், தானே நடித்து காட்சி வடிவில்,'குவைத்' நாட்டில் நடைபெறும் தனது கச்சேரியில் திரு. ஶ்ரீகாந்த் தேவா அவர்களின் பொற்கரங்களால் வெளியிட்டார். இப்பாடல் உலகளவில் இவரை கொண்டு சென்றது மட்டுமின்றி புகழின் உச்சியில் வைத்துள்ளது எனலாம். ==வெளிநாடு== மஸ்கட், குவைத் போன்ற நாடுகளுக்கு சென்று தன் கலைச்சேவையை நடத்தினார். ==பட்டங்கள்== 2016-ல் குவைத் நாட்டில் உள்ள வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இவருக்கு 'மண்ணிசை இளவரசன்' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 2016-ல் தஞ்சாவூர் நாடக நடிகர்கள் சங்கம் 'குரல் கலை முரசு' என்ற பட்டம் வழங்கி கௌரவித்தது. ==முனைவர் பட்டம்== 2016 டிசம்பர் 11ம் நாள் அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ 'முனைவர்' (டாக்டர்) பட்டம் வழங்கி கௌரவித்தது. ==திரைத்துறை== 2009ஆம் ஆண்டு நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரகேசர் அவர்கள் இயக்கிய வெளுத்துக்கட்டு திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால் பதித்தார். அத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் பரணி அவர்களின் இசையில் 'ஒத்தையா இருந்த உசுருக்குள்ள...' எனத் தொடங்கும் பாடலை பாடியது மட்டுமின்றி, அப்படத்தில் நகைச்சுவை நடிகராகவும் அறிமுகமானார். 2014ஆம் ஆண்டு இயக்குநர் பாரதி பாலகுமாரன் அவர்களின் இயக்கத்திலும்', இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் இசையில் மாஸ்டர் மகேந்திரன் நடித்து வெளிவந்து வெற்றிகரமாய் ஓடிய 'விழா' திரைப்படத்தில் 'மதுர என்னும் மாநகராம்...' எனத் தொடங்கும் பாடலை பாடி இவரே நடித்தார். இந்த பாடல் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்ததன் மூலம் மக்கள் மனதில் இவர் முகம் நிலையாய் நின்றது. 2015ல் பாடகர் எஸ்.பி.பி.சரண் அவர்களின் தயாரிப்பில் பெண் இயக்குநர் மதுமிதா அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூணே மூணு வார்த்தை; திரைப்படத்திலும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் இயக்கம் மற்றும் இசையில் உருவாகியுள்ள 'வானவில் வாழ்க்கை' திரைப்படத்திலும் பாடி நடித்துள்ளார். 2016ல் இசையமைப்பாளர் திரு.ஶ்ரீகாந்த் தேவா அவர்களின் இசையில் வெளிவந்த 'இளமி' என்ற திரைப்படத்தில் கவிஞரும், திரைப்பட இயக்குநருமான திரு.இராஜாகுருசாமி அவர்களின் ராஜவரிகளில் உருவான மதுரை பெருமை சொல்லும் 'தவிலெடுத்து அடிடா...' என்ற பாடலையும், ஜல்லிக்கட்டின் பெருமை சொல்லும் 'தீப்பறக்க முட்டிப்பாரு....' என்ற பாடலையும் பாடியுள்ளார். இதில் ஜல்லிக்கட்டின் தேசிய கீதம் போல் 'தீப்பறக்க முட்டிப்பாரு...' பாடல் பட்டித்தொட்டி மட்டுமல்ல தேசம் தாண்டியும் தமிழர்களின் பெருமை சொல்லி வெற்றி நாட்டுகிறது. 2018 - ல் பல முன்னணி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார், சமீபத்தில் இசையமைப்பாளர் திரு, உத்தமராஜாவின் இசையில் பாடியுள்ள உனக்குள்ள ஒளிச்சி வச்ச எனும் காதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ....... தனது புதிய படைப்பான #அட்ரா_அட்ரா_உறுமிமேளம் எனும் புதிய இசைத் தொகுப்பில் இரண்டு பாடல்கள் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்....அதிலும் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.... மேலும் அடிபுள்ள எனக்கு என்கிற வீடியோ பாடலும் வெற்றி பாடலாக வளம்வருக்கிறது இன்றைய இளைஞர்களால் #கிராமியத்_தளபதி என அன்போடு அழைக்கப் படுகிறார்.......இந்த இசையுலக ராஜா ....... வாழ்க தளபதி💐💐💐 இளங்கவி அருண்.ஜெ
Subscribe to:
Posts (Atom)